ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மழைநீரில் மூழ்கிய நெற்கதிர்களை அறுத்து உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் மேலசாக்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் மானாவரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்துவரும் நிலையில் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதனால் கவலை அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் அடுத்த ஆண்டு நெல் விதை தேவைக்கு அதிக விலைகொடுத்து விதைகளை வாங்க வேண்டும் என்பதால், தற்போது தங்களது வயல்களில் நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை கொட்டும் மழை என்றுகூட பாராமல் கூலி ஆட்கள் உதவியுடன் அறுத்துவருகின்றனர். அறுத்த நெற்கதிர்களை கட்டில் அமைத்து சேகரித்து, தார்ப்பாய்களை சாலை ஓரங்களில் விரித்து, உலரவைத்து அவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்