அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் வன்முறை நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே போன்ற வன்முறை சம்பவங்களை 50 மாநிலங்களிலும் நிகழ்த்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தலைநகர் வாஷிங்டன் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விர்ஜினியாவில் இரு கைத்துப்பாக்கிள், மற்றும் வெடிப்பொருட்களுடன் அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், இன்று நாடு தழுவிய அளவில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?