அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கிவைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, "நம் பாரம்பரியத்தை, கலாசாரத்தை காப்பது ஜல்லிக்கட்டு விளையாட்டுதான்" என்றார்.
"ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் கலந்துகொண்டு துவக்கிவைத்த கழகத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரையும் வரவேற்கிறேன்” என்று பேசிய முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துரையில் துணை முதல்வர் ஓபிஎஸுக்கு ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ’’உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த மண்ணில் பிறந்த வீரர்கள் அனைவரும் சீறிவரும் காளைகளை பக்குவத்தோடு அடக்க இங்கு வந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுள்ளனர். நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை காக்கக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அதிமுக அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதை இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்’’ என்று பேசினார்.
மேலும் காளைகளை அடக்க வந்துள்ள இளைஞர்களுக்கும், அவற்றை வளர்த்த விவசாயிகளுக்கும், வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை முடித்தார் முதல்வர் பழனிசாமி.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?