கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஊர் மக்கள் திரண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை வெற்றி பெற இறைவனை இந்த நாளில் வேண்டுவதாக தெரிவித்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள்தோறும் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் ஊர் மக்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் இன்று பொங்கலிட முடியுமா என்ற சந்தேகத்தில் பெண்கள் காணப்பட்டனர். ஆனால், இன்று அதிகாலை முதல் மழை பெய்யாததால் ஏராளமானோர் மகிழ்ச்சியோடு தங்கள் பகுதிகளில் பொங்கலிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்தின் முன்பு நூற்றுக் கணக்கானோர் திரண்டு பொங்கலிட்டனர். அதிகாலையிலேயே சிறியோர் முதல் முதியோர் வரை ஆண்களும் பெண்களும் ஒன்றுகூடி பொங்கலிட்ட தோடு விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயம் செழிப்பதற்காகவும் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை வெற்றிபெற தங்கள் பொங்கல் நிகழ்ச்சி மூலம் இறைவனை வேண்டுவதாக தெரிவித்தனர்.
Loading More post
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு