தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நேற்று காலையே குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடைவிதிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று மாலை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போத தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் அதிக அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு