குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மலையோர கிராம மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோதையாறு அணையின் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் அங்குள்ள மின் உற்பத்தி நிலையில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீரானது அதிகரித்துள்ளது.
இந்த தண்ணீரானது இன்று காலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது கோதையாற்றின் குறுக்கே மோதிரமலையிலிருந்து குற்றியார் செல்லும் பாதையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் வழியே செல்கிறது.
இதனால் குற்றயர், கிளவியர், தச்சமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட 12 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் சொந்த கிராமம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?