குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மலையோர கிராம மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோதையாறு அணையின் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் அங்குள்ள மின் உற்பத்தி நிலையில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீரானது அதிகரித்துள்ளது.
இந்த தண்ணீரானது இன்று காலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது கோதையாற்றின் குறுக்கே மோதிரமலையிலிருந்து குற்றியார் செல்லும் பாதையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் வழியே செல்கிறது.
இதனால் குற்றயர், கிளவியர், தச்சமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட 12 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் சொந்த கிராமம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’