பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில், 16 லட்சத்து 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது. எஞ்சிய 38 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை தலா 295 ரூபாய் விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தடுப்பூசிக்கான முழுச்செலவை மத்திய அரசே ஏற்கும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு