இந்தியாவில் ஆன்லைன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் POCO பிரண்ட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கவுண்டர்பார்ட் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட நவம்பர் மாத அறிக்கையின் அடிப்படையில் POCO போன்களுக்கு இந்தியாவில் டிமெண்ட் எகிறி இருப்பதாக தெரிகிறது. ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பிராண்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு POCO முன்னேறியுள்ளது.
குறிப்பாக POCO-வின் M2 மற்றும் C3 மாடல்தான் ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விற்பனையான டாப் 3 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் XIAOMI நிறுவனத்தின் துணை நிறுவனமான POCO கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் தனியாக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கி இந்த உயரத்தை எட்டியுள்ளது.
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான போன்களை விற்பனை செய்துள்ளதாக POCO நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 2021 இல் POCO அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் XIAOMI மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!