சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பூனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய மருந்து தர நிர்ணயக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருந்தது. இந்நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து, மூன்று கட்ட பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் நாடுமுழுவதும் வருகிற 16ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கிடையேயான ஆலோசனை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்துள்ள 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று அல்லது நாளை காலையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசி விநியோகம் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குளிர்பதன வசதிகள் கொண்ட போக்குவரத்து சாதனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!