சிட்னி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை சமன் செய்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என இதை சொல்லலாம். இருப்பினும் இதில் ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வினின் பங்கு கொஞ்சம் அதிகம். இருவரும் மாரத்தான் ஓட்டம் போல நீண்ட நெடிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அவர்களது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை நெயில் பைட்டிங் மொமெண்ட்டிற்கு கொண்டு சென்றது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை அசராமல் எதிர்கொண்டனர் இருவரும். அதிலும் அஷ்வின் விஹாரியுடன் பேசிய படி அவருக்கும் நம்பிக்கை கொடுத்து, அதை தனக்குமான நம்பிக்கையாக எடுத்துக் கொண்டார்.
குறிப்பாக ஆட்டத்தின் போது அஷ்வின் விஹாரியுடன் தமிழில் பேசியுள்ளார். “கவலைப்படாம ஆடு மாமா. ஆடு. பால் வெளிய தான் போகும். பத்து பத்து பாலா போவோம். நாப்பது பால் தான் மொத்தம்” என அஷ்வின் தமிழில் சொல்லியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது இப்போது வைரலாக பகிரப்பட்டும் வருகிறது.
Ashwin talking in Tamil with vihari:
P.S. @prithinarayanan please give our love to @ashwinravi99 pic.twitter.com/x5ZU0ls4ZF — M2 (@emmcesquared) January 11, 2021
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்