"தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. யார் வந்தாலும், வராவிட்டாலும் எந்த தாக்கமும் ஏற்படாது. 4 ஆண்டுகள் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம், மக்கள் அதற்கான அங்கீகாரத்தை தருவார்கள்" என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின் புதிய தலைமுறையிடம் பேசினார். அப்போது, "அதிமுக விலக்கி அமைக்கும். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் எந்த நாட்டில் நடப்பதை சொல்கிறார் என்று தெரியவில்லை புதிய நீதிபதி ஆற்றிய உரையும் ஸ்டாலினுக்கு பதிலாக அமையும்" என தெரிவித்தார்.
மேலும், “பொது குழு கூடியதற்கும், சசிகலா வருகைக்கும் சம்மந்தம் இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை காலதாமதமாக தான் நடந்துள்ளது. மனதாலும், ஆன்மாவாலும் அதிமுக ஒன்றுப்பட்டு நிற்கிறது. பிரிவினை விதையை யார் தூவினாலும் மக்களால் புறந்தள்ளப்படுவர். மக்கள் தொடர்புடன் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. தமிழகத்தில் 99.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எந்த தாக்கமும் ஏற்படாது. கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்ற சாதனையை வைத்து வாக்கு கேட்போம். மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை தருவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு