விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை, அஜித் ரசிகர் மன்றத்தினர் குளிக்க வைத்து சுத்தப்படுத்தினர்.
விருதுநகர் மாவட்ட அஜித்குமார் மன்றத்தினர், நடிகர் அஜித்தின் பெயரில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கியும், மரம் நடும் பொதுபணிகளையும் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருவில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை குளிக்க வைத்து, முடிதிருத்தம் செய்து அவர்களுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். சமூக சேவையாற்றிய அஜித் நற்பணி மன்றத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்