வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகளின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் அது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை இணைத்து விசாரணை நடைபெற உள்ளது.
விவசாயிகள் போராட்ட பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறியிருந்த நீதிபதிகள், விவசாயிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
விவசாயிகளுடன் அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்ற நிலையில் 9ஆவது சுற்று பேச்சு15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்றும் இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’