சென்னையில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அந்த வீட்டில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 4 பெண்கள் உள்பட 11 பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ. 72,780-ஐ பறிமுதல் செய்தனர். கைதான 11 பேர் மீதும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிறகு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’