புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர் கொட்டும் மழையிலும் சாலையில் படுத்து தூங்கினர்.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று முன் தினம் காலையில் அண்ணாசிலை அருகே தர்ணாப் போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக நீட்டித்தப் போராட்டம் இரவிலும் நீடித்தது.
கொட்டும் மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர். காங்கிரஸின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று 3ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்