சென்னையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின்னர் பொறுப்பாளர்களுடம் ஆலோசனை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ’’எடப்பாடியாரை மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசிவருகிறார். எடப்பாடியாரை தவறாக பேசினால் உங்கள் நாக்கு அழுகிவிடும். அண்ணன் எடப்பாடியார் தீரன் சின்னமலை, அண்ணன் ஓ.பி.எஸ் பூலித்தேவன். ஓபிஎஸ்-இபிஎஸ் மருது சகோதரர்கள் போலவும், ராமன் லெட்சுமணன் போலவும் செயல்படுகின்றனர்’’ என்றார்
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு