தோனி தனது தோட்டத்தில் ஸ்டாபரியை விளைவித்து சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் 10 ஏக்கரில், பிரேத்யமாக நிலத்தை ஒதுக்கி விவசாயம் செய்து வரும் தோனி தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி உள்ளிட்ட பல வகை காய்கறிகளை விளைவிக்கிறார். இந்தக் காய்கறிகள் ஜார்கண்ட்டின் உள்ளூர் தேவைக்காக கொண்டு செல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி இந்தக் காய்கறிகள் அரபு நாடுகள் மட்டுமனறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தோனி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை சாப்பிடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை கடித்து சாப்பிடும் தோனி, தான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் தோட்டத்தில் ஒரு ஸ்டாபரி கூட மிஞ்சாது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தோனி பதிவிட்ட ஒரு மணி நேரத்தில், 2 மில்லியனை பார்வையாளர்களை தாண்டியது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி