அஞ்சல் துறை தேர்வுக்கான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்தற்கு அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டிற்கான அஞ்சல்துறை கணக்காளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநில மொழிகள் விடுப்பட்டிருக்கின்றன. இதனைக் பலத் தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அஞ்சல்துறைத் தேர்வுக்குத் தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் தேர்வெழுத வேண்டுமா? இனி ஆங்கிலத்திலும் இந்தியிலும் முகவரி எழுதினால்தான் அஞ்சல் சென்று சேருமா? சினத்தோடு கண்டிக்கிறோம்” என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
அதோடு, நடிகர் சரத்குமாரும் “அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. தமிழ் மொழியை இணைத்து புதிய அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு