எப்போதும் பெரியவர்களிடமிருந்து தான் சிறியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் யாரிடமிருந்தாலும் அவற்றை நாம் பெற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்வதுமே நல்ல முன்நகர்வு. அவ்வகையில் சமூகவலைதளங்களில் தற்போது பரவிவரும் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
மழையின் காரணமாக சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீரை ஒரு சிறுமியும், சிறுவனும் சேர்ந்து விபத்து ஏற்பட்டுவிடாமல் தடுக்க அவற்றை மூடுகின்றனர். அருகில் இருக்கும் உடைந்த இரும்புத் தடுப்பு ஒன்றை எடுத்து பள்ளத்தின் மேல் பாதுகாப்பாக மூடுகின்றனர். சிறுமியும் சிறுவனும் அக்கா, தம்பியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. சிறுமி பள்ளத்தை மூடும் போது உடனிருக்கும் சிறுவன் அச்சிறுமி மழையில் நனைந்து விடாதபடி குடைபிடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
சிறுமியும் சிறுவனும் செய்யும் இந்தச் செயல் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. எதிர்கால தலைமுறையின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இந்த வீடியோ உள்ளது.
?????#children pic.twitter.com/NoGUoOYgHb — Prasanna Vs (@PrasannaVs7) January 7, 2021
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி