அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் 6 மணிநேரத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து நாடாளுமன்றம் தொடங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்யும் இறுதிகட்ட நடவடிக்கையாக தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, சான்றிதழ் வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்ததால் மோதல் மூண்டது. தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து செனட் கூட்டம் மீண்டும் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை துணை அதிபர் மைக் பென்ஸ் கொண்டுவந்தார்.
வன்முறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!