சென்னை மெரினாவில் படகு பழுதானதால் கடலில் சிக்கித் தவித்த 2 மீனவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு நேற்று கரைக்கு திரும்பினர். அப்போது அவர்கள் பயணித்த பைபர் படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் அலையில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் இரண்டு மீனவர்கள் படகுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். எஞ்சிய மூன்று மீனவர்கள் நீந்தி கரைக்குத் திரும்பி மெரினா கடற்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
துரிதமாக செயல்பட்டு, நீச்சல் தெரிந்த 6 தீயணைப்பு படையினர் கடலுக்குள் சென்று, ஆறுமுகம், ஜெயசீலன் ஆகிய 2 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்புப் படை இயக்குநர் சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு