தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரும், முன்னாள் ஹாக்கி வீரருமான பிரவீன் ராவ் மற்றும் அவரது உறவினர் இருவரை கடத்திக் கொண்டு சென்ற வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், அல்லகடா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பூமா அகிலா பிரியா மற்றும் அவரது கணவர் பார்கவும் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாக்கி வீரர் பிரவீன் ராவ் மற்றும் இரு உறவினர்கள் அவர்களது வீட்டில் இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரியைபோல வேடமிட்டு வந்த கடத்தல் கும்பல் அவர்களை கடத்தி சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்களை மறுநாள் காலை 3 மணி அளவில் சாலையோரம் விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அவரது சகோதரரும், வழக்கறிஞருமான பிரதாப் குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்தது முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியா என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரையும், அவரது கணவரையும் கஸ்டடியில் எடுத்து, விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு