இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பார்வையாளராக பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாளை மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 48 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கும் வசதி கொண்ட சிட்னி மைதானம் தற்போது 10 ஆயிரம் பேர் மட்டும் பார்க்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், நாளை தொடங்கவுள்ள மூன்றாவது போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னரும் வருகை தந்துள்ளது அந்த அணிகளுக்கு பலத்தை கூட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்