திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் மகன் இறந்த செய்தியைக் கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
திருச்சி துறையூர் அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ்(60). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்ததுடன் கடைத்தெருவில் இலை, வெற்றிலை வியாபாரமும் செய்து வந்தார். நேற்று முன் தினம் தனது கடைக்கு எதிரே உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திய இவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஏறும் போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். மகன் கீழே விழுந்ததை பார்த்து அவரது தாயாரான சரசம்மாளும் பதட்டமடைந்து மயக்கமடைந்தார்.
கனகராஜ்ஜை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்தத் தகவலை கேட்ட தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடலும், ஒரே இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி