திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19). இவர் கடந்த 3ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரைவிட்டு சற்று தொலைவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார்(25) கௌதமியை பின்தொடர்ந்து வந்து கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததால், அவரிடமிருந்த கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கெளதமி நடந்தவற்றை கூறியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து இந்த கொலை தற்காப்புக்காக செய்யப்பட்டதுதான் என போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இது தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு