2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60000 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது. உலகிலேயே இது தான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தன்று 371504 குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது யுனிசெஃப். அதில் 52 சதவிகித குழந்தைகள் பத்து நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு அன்று 33615 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த ஆண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் எனவும் கணக்கிட்டுள்ளது யுனிசெஃப்.
“இந்த ஆண்டு பிறந்துள்ள குழந்தைகளை முற்றிலும் மாறுபட்ட உலகில் பிறந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று அனைத்தையும் மாற்றியுள்ளது. யுனிசெஃப்பின் உதவி பலருக்கும் தேவைப்படலாம்” என தெரிவித்துள்ளார் யுனிசெஃப் செயல் இயக்குனர் Henrietta Fore. இருப்பினும் இந்தியாவில் கடந்த 2020 புத்தாண்டு தினத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 7390 குழந்தைகள் குறைவாகவே பிறந்துள்ளன.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி