இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியோடு கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்ட காரணத்தினால், இந்திய அணியை இரண்டாவது போட்டியிலிருந்து வழிநடத்தி வருகிறார் ரஹானே. முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 - 1 என இந்த தொடர் சமநிலையில் உள்ளது.
சிட்னியில் வியாழன் அன்று (ஜன.7) மூன்றாவது போட்டி ஆரம்பமாக உள்ளது. இது கேப்டனாக ரஹானேவுக்கு நான்காவது போட்டியாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா (2017), ஆப்கானிஸ்தான் (2018) மற்றும் ஆஸ்திரேலியா (2020) என மூன்று முறை டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்தி வெற்றி பெற செய்துள்ளார். 100 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்துள்ள ஒரே இந்திய டெஸ்ட் கேப்டன் ரஹானே தான்.
சிட்னியில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணியை வெற்றி பெற செய்தால் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்யலாம். இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய முதல் நான்கு போட்டிகளிலும் தோனி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரஹானே சிட்னி டெஸ்டில் வெற்றியை பதிவு செய்தால் தோனிக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான இந்திய கேப்டனாக போற்றப்படுவார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும் விதமாக ரோகித் ஷர்மா வந்துள்ளார். அதே போல ஆஸ்திரேலிய அணியிலும் சிட்னி மண்ணின் மைந்தன் வார்னர் விளையாட உள்ளார்.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்