இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், காயம் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், காயம் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆறு இன்னிங்ஸில் இரண்டு முறை அவர் அரை சதம் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாத அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்த பொது கைமூட்டு பகுதியில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் தொடரிலிருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
More details ? https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L— BCCI (@BCCI) January 5, 2021Advertisement
ராகுலுக்கு முன்னதாக உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விளையாடாமல் விலகியது குறிப்பிடத்தக்கது. சிட்னி மைதானத்தில் இருபதாயிரம் பார்வையாளர்களை அனுமதிக்கவும் உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி