இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை பகுதியில் திடீரென்று 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை பகுதியில் திடீரென்று 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்ததை அடுத்து, அறிவிப்பு வரும்வரை நீர்த்தேக்கத்தின் எல்லையில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் இறந்த உடல்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
'காங்க்ராவில் இப்போது மறுஉத்தரவு வரும் வரை ஒரு கிலோமீட்டருக்குள் மனித மற்றும் உள்நாட்டு கால்நடை நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது. ஒரு கி.மீ தூரம் எச்சரிக்கை மண்டலமாகவும், அதைச் சுற்றியுள்ள மற்றொரு 9 கி.மீ. கண்காணிப்பு மண்டலமாகவும் உள்ளது” என்று காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் குமார் பிரஜாபதி தெரிவித்தார்.
இறந்த பறவைகளில் பெரும்பான்மையானவை மூடப்படாத தலையையுடைய வாத்துக்கள் என்று காடுகளின் முதன்மை தலைமை கன்சர்வேட்டர் அர்ச்சனா சர்மா தெரிவித்தார். புலம்பெயர்ந்த பறவைகளின் இறப்புகளை சரிபார்க்க அனைத்து மாவட்டங்களின் பிரிவு வன அதிகாரிகள் எச்சரிக்கையாக உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!