இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் நலம் குன்ற காரணமே அரசியல் தலைவர்கள் அவருக்கு கொடுத்த அழுத்தம் தான் கரணம் என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஷோக் பட்டாச்சார்யா.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியை பார்த்துவிட்டு திரும்பிய நிலையில் அஷோக் பட்டாச்சார்யா இதை பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
“கங்குலிக்கு அரசியலில் பெரிய அனுபவம் கிடையாது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே இந்த உடல்நலக் குறைவிற்கு காரணம். மருத்துவமனையில் அவரை சந்தித்த போது அரசியல் வேண்டாம் என்றேன். அவரும் அமைதியாக அதை கேட்டுக்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது கருத்துகளை வன்மையாக கண்டித்துள்ளார் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ். மேலும் கங்குலி விரைவில் குணம் பெற இறைவனை வேண்டிக் கோல்கவதாகவும் அவர் தெரித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு