இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயன்ற உறவினரை பெண் ஒருவர் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19). இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவரது உறவினரான அஜித்குமார்(25) கௌதமியை பின் தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கெளதமி நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த கெளதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?