அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியா அறவாரியம் அறிவித்துள்ளது.
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகக் கொண்டது. (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய்) இவ்விருது பற்றிய அறிவிப்பினை சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் அறிவித்தார்.
சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான காவல்கோட்டம் 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. மதுரை மக்களவை உறுப்பினராக இருக்கும் சு.வெங்கடேசனின் 'வீரயுகநாயகன் வேள்பாரி' நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு