கேரளாவில் சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஜனவரி 5ம் தேதி முதல் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்னமே மார்ச் மூன்றாவது வாரத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து வந்த தளர்வுகளின் அடிப்படையில் திரையரங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படவில்லை.
இதையடுத்து கேரளாவில் சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஜனவரி 5ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் வழிபாட்டு தலங்களில் கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 5 முதல் அனுமதிக்கப்படுவர் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அரங்கில் 100 பேரும், வெளியில் 200 பேரும் அனுமதிக்கவும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை