தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான அட்ராங்கி ரே படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆனந்த் எல் ராய்.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் அட்ராங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷும் நடிக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் தனக்கு கொரோனா தொற்று என்பதை “இன்று எனக்கு கொரோனா சோதனை செய்ததில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி தனிமைப்படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சோதனை மேற்கொள்ளவும்” என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு