மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாது துரோகம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசின், அரசாணை ரத்து செய்யப்பட்டுவிட்டதால் மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில், தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாக மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை என்றார்.
முன்னதாக, எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?