சட்டமன்ற தேர்தலின்போது விவசாயியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.78 லட்சத்தை 4 வாரங்களில் திருப்பிக் கொடுக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, ஆண்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ண பிள்ளை என்பவரது தோட்டத்தில், வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்ததாகக்கூறி 6 லட்சத்து 78 ஆயிரத்து 10 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அது சவுக்கு மரங்கள் விற்றதன்மூலம் கிடைத்த பணம் எனவும், அதை திருப்பித்தரக் கோரியும் கண்ண பிள்ளை தாக்கல் செய்த மனுவை வானூர் முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது பணத்தை திருப்பித்தரக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை என்பதால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித்தரக் கோரி கண்ணபிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், விவசாயி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழங்க மறுக்கமுடியாது எனக் கூறி, நான்கு வாரங்களில் பணத்தை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பணத்தை திருப்பிக் கேட்டு அளித்த விண்ணப்பத்தின்மீது முடிவெடுக்காமல் தங்கள் கடமையை தவறக்கூடாது என வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?