சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது.
?? MS DHONI wins the ICC Spirit of Cricket Award of the Decade ??
The former India captain was chosen by fans unanimously for his gesture of calling back England batsman Ian Bell after a bizarre run out in the Nottingham Test in 2011.#ICCAwards | #SpiritOfCricket pic.twitter.com/3eCpyyBXwu — ICC (@ICC) December 28, 2020
ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2011 நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இயன் பெல் ரன் அவுட்டில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் முதலில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் 137 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் அவர் மீண்டும் விளையாட அப்போதைய இந்திய கேப்டன் தோனியால் அழைக்கப்பட்டார். அது ரசிகர்களின் மனதிலிருந்து என்றென்றும் நீக்க முடியா நினைவலைகள். அது தோனியின் கேம் ஸ்பிரிட்டும் கூட. அதுபோல கிரிக்கெட் களத்தில் தோனி தனது கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விருதுக்கான போட்டியில் வெட்டோரி, ஜெயவர்த்தனே, கேத்ரின் பிராண்ட், மெக்கல்லம், மிஸ்பா உல் ஹாக், அன்யா, கேன் வில்லியம்சன் மற்றும் கோலி ஆகியோர் இருந்தனர்.
நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (வீடியோ)
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு