நான்கு வழிச் சாலைகளில் அதிகம் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபர்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்லும் பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் மீது கற்கலைவீசி தாக்குதல் நடத்தி கொள்ளைச் சம்பவம் நடைபெறுவதாக ஆடியோ ஒன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது அதிக அளவில் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிசிடிவி காட்சியில் எதிரே வரும் வாகனத்தின் மீது ஒருவர் அதிக ஒளி உமிழும் டார்ச் லைட்டை அடிக்கிறார். அப்போது வாகனத்தின் ஓட்டுநர் நிலைதடுமாறி வாகனத்தை நிறுத்துகிறார். உடனே லைட் அடிக்கும் நபரின் பின்புறமிருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த 5பேர் உருட்டுக் கட்டைகளுடன் அந்த வாகனத்தை நோக்கி வரும்போது அந்த வாகன ஓட்டி மீண்டும் தனது வாகனத்தை பின்புறமாக இயக்கி தப்பித்து செல்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அந்த வாகனத்தை நோக்கி தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டைகளை வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த சிசிடிவி குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்ட பிறகே, குற்றவாளிகள் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதுபோல வைரலாகும் வீடியோக்களால், இரவு நேரங்களில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'