கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் இன்று சிறுவாணி சாலையில் போலீசாரால் மீட்கப்பட்டது.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). இவர், கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன் தினம், தனது கார் ஓட்டுநர் சம்சுதீன் (42) என்பவருடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கிளம்பினர்.
இதையடுத்து நேற்று அதிகாலை கோவை நவக்கரை அருகே வந்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல், அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் எஸ்.பி.அருளரசு உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே கேரள பதிவு எண் கொண்ட கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து கடத்தப்பட்ட கார் என தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காரில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். கோவை - கேரள எல்லையில் கடத்தப்பட்ட கார் சிறுவாணி சாலையில் மீட்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு