கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 லட்சம் ரூபாயுடன் காரை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அப்துல் சலாம். இவர், தொழில் நிமித்தமாக கோவை வந்து விட்டு இன்று அதிகாலை தனது காரில் ஓட்டுனர் சம்சுதீன் என்பவருடன் பாலக்காடு சாலையில் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நவக்கரை நந்தி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 5 மர்ம நபர்கள் அப்துல் சலாமின் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. அப்துல் சலாமுடன் ஓட்டுனரையும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்ட நபர்கள், காரில் இருந்த 27 லட்ச ரூபாயுடன் காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம், தொடர்பாக அப்துல் சலாம் க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் காருடன் 27 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி