முதல் டெஸ்டில் வீழ்ச்சி, அனுபவ வீரர்கள் கோலி மற்றும் ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஹீரோக்கள் அவதரிக்க போகும் நேரம் இது என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண். தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
“முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டை இழந்தது ஆக்ஷன் ரீபிளே போல தான் இருந்தது. இருப்பினும் அந்த ஒரு இன்னிங்க்ஸை வைத்து வீரர்களின் திறனை முடிவு செய்துவிட முடியாது. இவர்கள் உலகின் பல இடங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியாவுக்காக அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட உள்ள இளம் வீரர்கள் ஹீரோவாக அவதரிக்க உள்ளனர். நிச்சயம் எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை இந்திய வீரர்கள் கொடுப்பார்கள்” என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் இந்தியா ஆஸ்திரேலியாவில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும் என சொல்லியுள்ள நிலையில் லக்ஷ்மணின் கணிப்பு இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?