இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் வரும் 26 ஆம் தேதி அன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ள நிலையில் ரஹானே கேப்டனாக இந்தியாவை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளடையாடவில்லை என அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுவதுமாக குணமடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வார்னர் அணியுடன் இப்போதைக்கு இணையவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வார்னர் வசித்து வரும் சிட்னி நகரில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகம் உள்ளது இதற்கு காரணம். வரும் ஜனவரி 7 ஆம் தேதி அன்று இந்தியா சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அங்கு கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!