இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் வரும் 26 ஆம் தேதி அன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ள நிலையில் ரஹானே கேப்டனாக இந்தியாவை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளடையாடவில்லை என அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுவதுமாக குணமடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வார்னர் அணியுடன் இப்போதைக்கு இணையவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வார்னர் வசித்து வரும் சிட்னி நகரில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகம் உள்ளது இதற்கு காரணம். வரும் ஜனவரி 7 ஆம் தேதி அன்று இந்தியா சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அங்கு கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி