பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. முந்தைய கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் இந்த தொற்றால் பல்வேறு நாடுகள் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வேறு ஒரு வடிவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசை விட இது வீரியமானது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா தொற்று அங்கிருந்து பிரிட்டன் வந்தவர்களுக்கு பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா B-117 இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?