இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2800 பேர் மூன்று அடுக்கு வளையத்தில் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும்போது, “ லண்டனிருந்து வந்தவரின் மாதிரி ஆய்வில் உள்ளது. அவரோடு பயணித்த 37 பேரில் 33 பேருக்கு தொற்று இல்லை. கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை, காவல் துறை ,உள்ளாட்சித் துறை என 3 அடுக்கு வளைய கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் உருமாறிய புது வகையான வைரஸை நினைத்து தேவையற்ற பதட்டமோ பயமோ கொள்ள வேண்டாம். நீலகிரி உள்ளிட்ட எந்த மாவட்டத்திற்கும் இங்கிலாந்திலிருந்துவந்தாலும் அவர்கள் முழுமையாக மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?