கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன
உலகெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ். இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்காக பலர் சில மாதங்களுக்கு முன்பாகவே தயாராவார்கள். பணி மற்றும் படிப்பு நிமித்தம் காரணமாக எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த ஊர் திரும்ப மக்கள் விரும்புவர். ஆனால் இந்தாண்டு கொரோனா பலரின் கொண்டாட்டங்களுக்கு தடை போட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளின் அரசுகள் வழக்கமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தவிர விதவிதமான பிற கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன. தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடற்கரை பகுதி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.
பிரிட்டனில் அதிகபட்சம் 3 குடும்பத்தினர் மட்டுமே ஒன்றாக கூடி கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில் கார்களை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. லெபனான் நாட்டில் இரவு விடுதிகளுக்கு செல்லலாம் என்றும் ஆனால் நடனமாட அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரான்சில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிடக் கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலி நாடு 15 பேர் வரை மட்டுமே ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிடலாம் என கூறியுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் சில மாகாணங்கள் வாணவேடிக்கைககள் நிகழ்த்த தடை விதித்துள்ளன.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு