பெங்களூருவில் இணையதள செயலி மூலம் கடன் பெற்றவருக்கு அந்நிறுவனம் மிரட்டல் விடுத்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழையனூரைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் இதுபோன்ற பிரச்னையால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதள செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் கடன்பெற்ற அவர், குறித்த நேரத்தில் திருப்பி செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத்தினர் விவேக்கை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வந்துள்ளனர்.
மேலும், விவேக்கின் நண்பர்களுக்கும் அவர் குறித்து அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதால் மனஉளைச்சல் அடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் இணையதள செயலி மூலம் கடன்பெற்றவருக்கு, அவரது செல்போனில் இருந்து நண்பர்களின் எண்கள், புகைப்படங்களை எடுத்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் வட்டி செலுத்தக்கோரி மிரட்டல் விடுத்ததால் அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செயலி நிறுவனம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு