விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மூன்று சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர், அதே ஊரை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு தன்னுடைய செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக அச்சிறுமிகளின் பெற்றோர் கடந்த 20ஆம் தேதி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தன்மீது புகார் அளித்ததை அறிந்த ஆறுமுகம் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடினார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை சூலக்கரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது சூலக்கரை போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என தெரியவந்தது. போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாரேனும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனரா என தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு