ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த முடிந்த இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதை செய்யத் தவறியதே தோல்விக்கு காரணம். இந்நிலையில் நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
“ஒரு அணி அதன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டாவது நல்லதற்கு அல்ல. ஆனால் எதிரணியின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்கின்ற ஒரு அணியால் பெரிய ரன்களை எடுக்க முடியாது. 36 மாதிரியான குறைந்த ஸ்கோர் இல்லை என்றாலும் 80 - 90 ரன்கள் வரைதான் எடுக்க முடியும். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு அசத்தலாக இருந்தது. அதனால் நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எதுவும் இல்லை. அப்படி சொல்வது நியாமும் இல்லை” என சொல்லியுள்ளார் கவாஸ்கர்.
இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களை, கடந்த 1974 லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்திருந்தது. அந்த அணியில் கவாஸ்கரும் இடம் பெற்றிருந்தார்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?